காத்மண்டு: ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டுக்கான 3வது குர்ஆன் மனனப் போட்டியின் இறுதிக் கட்டச் சுற்றுக்கள் நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் வெற்றிகரமாக நிறைவுபெற்றன.இப்போட்டிகளை இந்தியாவிலுள்ள சமய இணைப்பாளர் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சகம் மற்றும் நேபாளத்திலுள்ள இஸ்லாமிய ஆணையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினரிடையே நடைபெற்ற இப்போட்டிகளில், நான்கு பிரதான பிரிவுகளில் பரந்த பங்கேற்பு காணப்பட்டது:
* முழு குர்ஆனையும் மனனம் செய்தல்
* 15 பாகங்களை மனனம் செய்தல்
* 5 பாகங்களை மனனம் செய்தல்
* 2 பாகங்களை (அல் குர்ஆனின் 29வது 30வது பாகங்கள்) மனனம் செய்தல்.
நிறைவு விழாவில், இரு புனிதத் தலங்களின் பாதுகாவலரின் நேபாளத் தூதுவர், திரு. சாத் பின் நாசர் அபு ஹுமைத், இஸ்லாமிய ஆணையத்தின் மதிப்புக்குரிய பதர் இப்னு நாசிர் அல் அனஸி மேலும் பல தலைவர்கள், அதிகாரிகள், அழைப்பாளர்கள் முதலியோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், அல்லாஹ்வின் வேதத்தைப் பேணி, அதன் செய்தியைச் சர்வதேச ரீதியில் பரப்ப சவுதி அரேபிய இராச்சியம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இம்முடிவு உறுதிப்படுத்துகிறது என்றனர்.
(ஆதாரம்: moia.gov.sa/MediaCenter/Ne)






