சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு வருகை தந்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளின் உறவுகள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றங்கள் மற்றும் உக்ரைன் போர் நெருக்கடி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கும் இடையே ‘பாதுகாப்பு கொள்முதல்’ தொடர்பான முக்கிய ஒப்பந்தம் ஒன்றும் இன்று கையெழுத்தானது. சவுதி பாதுகாப்புத்துறை உதவி அமைச்சர் டாக்டர் காலித் அல்-பியாரியும், உக்ரைன் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆண்ட்ரி ஹ்னாடோவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்






