2026 புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, சவூதி அரேபியா தனது நிவாரணப் பணிகளை சர்வதேச அளவில் தீவிரப்படுத்தியுள்ளது. மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான பணிகள் மையத்தின் (KSrelief) மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்கள் மற்றும் பேரீச்சம்பழங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மனிதாபிமான முயற்சியின் கீழ் அண்மையில் வழங்கப்பட்ட உதவிகளின் விரிவான விவரங்கள் பின்வருமாறு:
ஆப்கானிஸ்தான் (கஜினி): 1,000 உணவுப் பொதிகள்.
பங்களாதேஷ் (ஷிகர்தெக் மற்றும் முகம்மதுபூர்): 585 உணவுப் பொதிகள்.
சூடான் (வெள்ளை நைல் மற்றும் கோர்டோபன்): 1,846 உணவுப் பொதிகள்.
சூடான் (செங்கடல் பகுதி): 300 பெட்டி பேரீச்சம்பழங்கள்.
யேமன் (ஹள்ரமவ்த் – அல்-ஷிக்ர்): 1,150 பெட்டி பேரீச்சம்பழங்கள்.
சாட் (ஹஜர் லம்மிஸ்): 1,700 பெட்டி பேரீச்சம்பழங்கள்.
சாட் (பஹ்ர் அல் கசல்): 701 பெட்டி பேரீச்சம்பழங்கள்.
ஜிபூட்டி (அர்தா): 450 உணவுப் பொதிகள்.
இந்த இக்கட்டான நேரத்திலும் தேவையுள்ள மக்களைச் சென்றடையும் நோக்கில் சவூதி அரேபியா மேற்கொண்டு வரும் இந்த விரிவான நிவாரணப் பணிகள், சர்வதேச அரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன






