தற்போது அரபு நாடுகளுக்கு எதிராக ஈரானினால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான தாக்குதல்கள் வெளியில் அமெரிக்காவுக்கு அமெரிக்க தளங்களுக்கு எதிராக என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அவை அரபு நாடுகளின் பொருளாதாரத்தை முன்னேற்றத்தை தடுப்பதற்கான முயற்சிகளாகவே அமைந்துள்ளன. பொது இடங்கள், விமான நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள், மின்சார மையங்கள் இலக்குவைக்கப்படுகின்றன. இவை வெறும் அமெரிக்க எதிர்ப்பு அல்ல மத்திய கிழக்கை பலவீனப்படுத்த எடுக்கப்படும் முயற்சியாகும்.
பல ரில்லியன் கணக்கான சொத்துக்கள் இதில் சேதமான போதிலும் மத்திய கிழக்கு அரபு நாடுகள் எதிர்த்தாக்குதல் நடத்தவில்லை இது சிலரால் பலவீனமாகப் பார்க்கப்பட்டாலும் உண்மையில் இது அரபு நாடுகளின் நிதானத்தையும் கூர்மையடைந்த அனுபவத்தையும் காட்டும் செயலாகும்.
ஈரானினால் ஏவப்படும் ஏவுகனைகள், ரோன்களை இடைமறித்தளிப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகான முயற்சிகளை இதுவரை மத்திய கிழக்கு நாடுகள் செய்துவருகின்றன அமெரிக்க தளங்கள் தாக்கப்பட்டாலும் அதிலிருந்து ஈரானை தாக்குவதற்கான அணுமதியினை மத்திய கிழக்கு நாடுகள் வழங்கவில்லை அதனால் அங்கிருந்து ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெறவில்லை. இது குறித்த தளங்கள் இன்னும் மத்திய கிழக்கு நாடுகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன ஈரான் சொல்வதைப் போன்று அமெரிக்காவின் சுய விருப்பப்படி இயங்கும் இடங்களாக இல்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன.
மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இந்த நிலைப்பாடு அவர்களின் கூர்மையான ஞானத்தையும் சிறந்த திட்டமிடலின் வெளிப்பாடாகும். மத்திய கிழக்கு நாடுகள் தாக்குதலை ஆரம்பிக்குமானால் நிச்சயமாக பாதிக்கப்படப்போவது பொதுமக்களே இரு நாடுகள் அல்லது பல நாடுகளிலும் இருக்கும் பொது மக்களே அதிகம் பாதிக்கப்படுடவார்கள் அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் சேதமடையும், அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் தடைப்படும். இது இஸ்ரேலுக்கு மிகப்பெரும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும். மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் அழிக்கப்படும் படுமாயின் பிற நாடுகள் அதற்கு ஆயுதம் விற்பதற்கும் பின்வாங்கும் இதனால் நிலமை இன்னும் சிக்கலாகும்.
இஸ்ரேல் தனது அகண்ட இஸ்ரேல் திட்டத்திற்கான வாயில் மிக இலகுவாக திறக்கப்படும் பலஸ்தீன நாடு என்ற கதைக்கே இடமில்லாத நிலை உருவாகும். மத்திய கிழக்கு அரபு நாடுகளின் இந்த நிலை மிகத் துள்ளியமான கணிப்பு மற்றும் சிறந்த திட்டமிடலின் வெளிப்பாடாகும்.







