மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றமான சூழலில், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சந்திக்கும் சவால்கள் வெறும் எல்லைப் பிரச்சினைகள் மட்டுமல்ல; அவை ஆழமான கொள்கை மற்றும் ஏகாதிபத்திய விரிவாக்கக் கனவுகளுடன் தொடர்புடையவை. ஒருபுறம் சீயோனிசத்தின் ‘அகண்ட இஸ்ரேல்’ கனவு, மறுபுறம் ஈரானின் ‘அகண்ட பாரசீகம்’ அல்லது பாரசீகப் பேரரசை மீளமைக்கும் ஆதிக்கம் ஆகிய இரு முனைகளுக்கு இடையே அரபு நாடுகள் நசுக்கப்படுகின்றன.
- கொள்கை ரீதியான (அகீதா) முரண்பாடுகள்:
முஸ்லிம் சமூகத்தில் ஷீயாக்கள் பற்றிய புரிதல் குறைவாக இருப்பது ஈரானுக்குச் சாதகமாக அமைகிறது. இவர்களின் அடிப்படை கொள்கைகள் இஸ்லாத்தின் தூண்களுக்கு முரணாக இருப்பதை சவுதி உலமாக்கள் ஆதாரங்களுடன் விளக்குகின்றனர்:
- இமாமத் கொள்கை: அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘மாசற்ற இமாம்கள்’ இருப்பதாக இவர்கள் நம்புவது, நபித்துவத்தின் இறுதியைச் சிதைப்பதாக அமைகிறது.
- சஹாபாக்கள் மீதான வன்மம்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்ற உத்தம சஹாபாக்களை இழிவாகப் பேசுவதும், அவர்களை சபிப்பதும் இவர்களின் வழிபாட்டின் ஒரு பகுதியாகவே உள்ளது.
- குர்ஆன் பற்றிய சந்தேகம்: தற்போதுள்ள அல்குர்ஆன் முழுமையற்றது என்றும், உண்மையான குர்ஆன் மறைந்துள்ள இமாமிடம் உள்ளது என்றும் இவர்களில் ஒரு சாரார் நம்புவது இஸ்லாமிய அடிப்படைக்கே எதிரானது.
- தகிய்யா (தற்காப்புப் பொய்): தனது உண்மையான கொள்கையை மறைத்துப் பேசுவதை இவர்கள் ஒரு புண்ணியமாகக் கருதுகின்றனர். இதனால்தான் ஈரானின் அரசியல் ஒப்பந்தங்களை சவுதி அரேபியா எச்சரிக்கையுடன் அணுகுகிறது.
- சிரியா மற்றும் ஈராக்கில் சுன்னத் ஜமாஅத் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்
ஈரானின் ‘புரட்சி ஏற்றுமதி’ கொள்கையினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு சிரியா ஆகும்.
- சிரியா படுகொலைகள்: பஷர் அல்-அசாத்தின் சிறுபான்மை அலவி ஆட்சியைத் தக்கவைக்க, ஈரானின் ‘குத்ஸ்’ படை மற்றும் ஹிஸ்புல்லாஹ் அமைப்புகள் இணைந்து நடத்திய தாக்குதல்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி சுன்னத் ஜமாஅத் மக்கள் கொல்லப்பட்டனர். குழந்தைகள், முதியவர்கள் எனப் பாராமல் இரசாயனக் குண்டுகளை வீசியும், பட்டினி போட்டும் ஈரானிய ஆதரவுப் படைகள் கொடூரங்களை இழைத்தன.
- மக்கள்தொகை மாற்றம்: சுன்னத் ஜமாஅத் மக்கள் வாழ்ந்த செழிப்பான பகுதிகள் இடிக்கப்பட்டு, அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, அங்கு ஷீயாக்கள் குடியேற்றப்படுவது ஒரு திட்டமிடப்பட்ட ‘மக்கள்தொகை மாற்ற’ நடவடிக்கையாகும்.
- ‘அகண்ட பாரசீகக்’ கனவும் சவுதி மீதான தாக்குதல்களும்
ஈரானின் உண்மையான இலக்கு இஸ்ரேலை அழிப்பதல்ல, மாறாக ஈராக், சிரியா, லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, ஒரு ‘ஷீயா வளையத்தை’ உருவாக்கி, அதன் மூலம் சவுதி அரேபியாவின் புனிதத் தலங்களைக் கைப்பற்றுவதே ஆகும்.
இந்த ஆபத்தான சூழலில், சவுதி அரேபியா தனது குடிமக்களையும், புனிதத் தலங்களையும் பாதுகாக்க எடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் இன்று பொதுவெளியில் தவறாக விமர்சிக்கப்படுகின்றன. தனது அண்டை நாடான ஈரான், ‘அமெரிக்கத் தளங்களைத் தாக்குகிறோம்’ என்ற போர்வையில் சவுதியின் பெட்ரோலியக் கிணறுகளையும், விமான நிலையங்களையும் குறிவைக்கும்போது, ஒரு பொறுப்புள்ள அரசு மௌனமாக இருக்க முடியாது. - இரட்டை வேடமும் நீதியும்
“உங்களுக்கு வந்தால் இரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி” என்ற மனப்பாங்கில் இருந்து முஸ்லிம் சமூகம் வெளியே வர வேண்டும். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அநீதிகளை நாம் எதிர்க்கும் அதே வேளையில், ‘இஸ்லாமிய ஆட்சி’ என்ற பெயரில் ஈரான் அரபு நாடுகளின் மீது நடத்தும் ஆக்கிரமிப்பையும், சுன்னத் ஜமாஅத் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளையும் கண்டிக்க வேண்டும். சவுதி அரேபியா எடுத்து வரும் ராஜதந்திர மற்றும் ராணுவத் தற்காப்பு நடவடிக்கைகள் அனைத்தும், ‘அகண்ட இஸ்ரேல்’ மற்றும் ‘அகண்ட பாரசீகம்’ ஆகிய இரு நச்சுக்கொள்கைகளில் இருந்து அரபு மண்ணைக் காப்பதற்கான நியாயமான முயற்சிகளே ஆகும்.
வெளிப்படையான மத அடையாளங்கள், நீண்ட தாடி மற்றும் தலைப்பாகைகளைக் கண்டு ஏமாறாமல், வரலாற்றையும் கொள்கைப் பின்னணியையும் ஆய்வு செய்வது காலத்தின் கட்டாயம். சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகின் பாதுகாப்தபோடு பின்னிப்பிணைந்தது என்பதை நாம் உணர வேண்டும்.






