சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில், அரபிக்களைகுடாவை ஒட்டி அமைந்துள்ள ராஸ் தனுரா நகரிலுள்ள உலகின் மிக முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலை சவூதி அரேபியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
“அல்-அரேபியா” செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த சவூதி பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி (Maj. Gen. Turki Al-Maliki), இலக்கை அடையும் முன்பே இரண்டு ட்ரோன்களும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ட்ரோன்களின் சிதறல்களால் ஏற்பட்ட சிறிய அளவிலான தீ விபத்து உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
எண்ணெய் விநியோகம் சீராக உள்ளது: இந்தத் தாக்குதலால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சவூதி அராம்கோ (Saudi Aramco) நிறுவனத்தின் உயர் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் செயல்பாடுகளின் பாதுகாப்பும், திட்டமிட்டபடி எண்ணெய் விநியோகமும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.






