சவூதி அரேபியாவின் ரியாத், மற்றும் சில பகுதிகளில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாகச் சவூதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானின் இத்தாக்குதல்கள் “கோழைத்தனமானது” என்றும், சர்வதேச மற்றும் மனித உரிமைச் சட்டங்களுக்கு முற்றிலும் முரணானது என்றும் சவூதி வன்மையாகக் கண்டித்துள்ளது.
ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்து ஈரான் ஆளில்லா விமானங்கள் (Drone) மூலம் நடத்திய தாக்குதலால், தூதரகத்தில் சிறிய அளவிலான பாதிப்புகளும், தீப்பரவலும் ஏற்பட்டது. எனினும், சவூதி வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிநவீனத் தளவாடங்கள் மூலம் ஈரானின் 8-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தி பெரும் சேதத்தைத் தவிர்த்துள்ளன. ஈரானின் இத்தாக்குதல்களில் சில ஈராக்கிலிருந்து வந்திருக்கலாம் என்று “அல்-அரபியா” செய்தி கூறுகிறது. இதுகுறித்துச் சவூதி கவனித்துவருகிறது.
இதனைத் தொடர்ந்து, ரியாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் தங்களது நாட்டு மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறும், சவூதியின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், குவைத் நாட்டில் உள்ள வாஷிங்டன் தூதரகத்தின் மீதும் ஈரான் நேற்று ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.






