சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் (Riyadh) மற்றும் கிழக்கு மாகாணத்தின் (Eastern Province) மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குச் சவூதி அரேபியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஈரானின் இந்தத் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாகச் (Intercepted) சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சவூதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- கோழைத்தனமான தாக்குதல்: ஈரானின் இந்த அப்பட்டமான மற்றும் கோழைத்தனமான தாக்குதல்களைச் சவூதி அரேபியா மிக வன்மையாகக் கண்டிக்கிறது. எந்தவொரு காரணத்தைக் கொண்டும், எந்த வகையிலும் இந்தத் தாக்குதல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
- சவூதியின் தெளிவான நிலைப்பாடு: ஈரானை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தத் தனது வான்வெளியையோ (Airspace) அல்லது நிலப்பரப்பையோ பயன்படுத்த எவரையும் சவூதி அரேபியா அனுமதிக்காது என்பதை ஈரான் அதிகாரிகள் நன்கு அறிவார்கள். சவூதியின் இந்த நிலைப்பாடு தெரிந்திருந்தும் ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
- பதிலடி கொடுக்கப்படும் (தற்காப்பு உரிமை): நியாயமற்ற இந்த அத்துமீறலைக் கருத்தில் கொண்டு, தமது நாட்டின் பாதுகாப்பு, நிலப்பரப்பு, குடிமக்கள் மற்றும் அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சவூதி அரேபியா எடுக்கும். இதில் ஈரானுக்குத் தக்க பதிலடி (Retaliation) கொடுக்கும் முடிவும் அடங்கும் என இன்றைய அறிக்கையில் சவூதி திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.





