நைஜீரியாவில் மூன்று வருடங்களாக பிரிந்திருந்த குடும்பத்தை இணைத்த சவூதி பிரபலம்!
சவூதி அரேபியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஊடகவாதி பவாஸ் அபு அல்-நூர் (Fawaz Abu Al-Nur), ரமலான் மாத உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்காக சர்வதேச ரீதியிலான தனது பயணத்தின் ஒரு பகுதியாக நைஜீரியா நாட்டிற்குச் சென்றிருந்தார்.
அங்கு உணவுப் பொதிகளை விநியோகித்துக் கொண்டிருந்தபோது, ஒரு குடும்பத்தினர் மட்டும் உணவைப் பெறுவதில் ஆர்வம் காட்டாமலும் மகிழ்ச்சியின்றியும் இருப்பதைக் கண்டு அவர் ஆச்சரியமடைந்தார். அவர்களைப் பற்றி விசாரித்தபோது, ஒரு சோகமான உண்மை வெளிவந்தது.
அக்குடும்பத்தின் தாய், வெறும் 1400 சவூதி ரியால்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தினால் கடந்த மூன்று வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உணவை விட தங்கள் தாயின் பிரிவே அந்தப் பிள்ளைகளை வாட்டியதை அவர் உணர்ந்தார்.
இதனை அறிந்தவுடன் தாமதிக்காத அவர், உடனடியாக அந்தத் தொகையைச் செலுத்தி, மூன்று வருடங்களாக சிறையிலிருந்த அந்தத் தாயை விடுவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது பிள்ளைகளுடன் அந்தத் தாய் இணைந்த உருக்கமான காட்சி காண்போரை நெகிழ வைத்தது. இவரது இந்த மனிதாபிமானச் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகின்றது.






