பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் சவூதி அரேபிய இராச்சியத்தின் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் இளவரசர் Abdulrahman bin Ayyaf Al-Muqrin ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பு ஒன்று பெப்ரவரி 9 அன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பு, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறும் உலக பாதுகாப்புக் கண்காட்சி (World Defence Show – WDS) நிகழ்வில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இலங்கை-சவூதி அரேபியாவுக்கிடையிலான நட்பு மிக இருதரப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும், நீண்டகால உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்தனர்.






